தில்லியில் முதல்வர் ஆட்சியைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதித்திட்டம் தீட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கேஜரிவால் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆம் ஆத்மி அரசுக்கு அமலாக்கத்துறை மூலமாக மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.