“இளைஞர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு வழங்கப்படும் அறிவுரைகளானது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இது சுகாதார வசதிகள் மற்றும் பாலர் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும். வீட்டில் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் வழிகள் ஆராயப்பட வேண்டும்,” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் சுகாதார எச்சரிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியதை அடுத்து திரு ஓங்கின் கருத்துக்கள் வந்துள்ளன. புகையிலை பொருட்கள் மீது சுகாதார எச்சரிக்கைகள் இருப்பதைப் போலவே, சமூக ஊடக தளங்களிலும் எச்சரிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரி விவேக் மூர்த்தி வலியுறுத்தினார்.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்னைகளுக்கு சமூக ஊடகங்களே ஒரு முக்கியக் காரணம் இது மிகவும் கவலை அளிக்கிறது என்று டாக்டர் விவேக் மூர்த்தி கூறியுள்ளார்.
திரு.வோங் அவர்கள் சுகாதார அமைச்சகமும், குடும்ப மேம்பாட்டு அமைச்சகமும் கடந்த சில மாதங்களாக இது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக அவர் கூறினார்.இப்பிரச்சினைக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் எதிர்வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

