மலேசியா ஒரு நல்ல சமூக சேவையாளரை இழந்தது. பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் நுழையும் இந்திய மாணவர்கள் தங்கள் வாய்ப்பை நலுவ விடாமல் பயனடையும் வகையில் செயலாற்றியவர் இவர்.
அதோடு இந்திய மாணவர்கள் எவ்வகையான வழிமுறையில் மேல் கல்வியை தொடர்வது, தங்கள் விண்ணப்பங்களை முறையாக செய்யவும் அதோடு கற்பதற்கு எவ்வகையான பல்கலைக்கழகத்தை தேர்வு செய்வது அல்லது மாணவர்களின் தரத்துக்கு ஏற்ற வரையில் எப்படி உயர்கல்வியை தேர்வு செய்வது போன்ற வகையில் நல்ல பலத்த அனுபவம் கொண்டிருந்த திருவேங்கடம் நாடு தழுவிய அளவில் ஒரு அருமையான நற்செயவையை செய்து கொண்டிருந்தார்.
பல ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் எண்ணிக்கை பல்கலைக்கழகங்களின் நுழைவில் குறைவாக இருப்பதற்கு காரணம் அரசாங்கத்தின் குறைந்த அளவில் கொடுக்கும் இடங்கள் மட்டுமல்ல அதோடு சமுதாயத்தில் இருப்பவர்கள் அரசாங்கம் வழங்கும் அந்த சலுகைகளை முறையான வகையில் பயன்படுத்திக் கொள்ள தவறி விடுகின்றனர் என்ற ஒரு காரணத்தினாலும் நமது எண்ணிக்கை கூட வில்லை என்ற குறையை நிவர்த்தி செய்வதற்காக அரும்பாடு பட்டவர் திருவேங்கடம்.
பெட்டாலிங் ஜெய நகராண்மைழக உறுப்பிணரகவும் செயலாற்றிய இவரின் சேவை மனப்பான்மையும், மென்மையான சுபாவமும் மக்களின் மனதை எளிதில் கவரும் தன்மை கொண்டவை.
அன்னாரின் மறைவு சமூகதிற்கும் ஓர் இழப்பாகும். அவரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கு மலேசிய இன்றுவின் ஆழ்ந்த இரங்கள்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை 1100-1.00 நடைபெறும்.