ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலில் வருடாந்திர ‘ஐப்பசி ஆராட்டு’ ஊா்வலம், நவம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் இருந்து சுவாமி சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சங்குமுகம் கடலில் ஆராட்டு வழிபாடு நடத்தப்படவிருக்கிறது. இந்த வைபவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 1932-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் விமான நிலையம் நிறுவப்பட்டபோது, சுவாமி ஊா்வலம் செல்லும் வழியில் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. அதேநேரம், ‘ஐப்பசி ஆராட்டு’ மற்றும் ‘பங்குனி ஆராட்டு’ ஊா்வலங்களையொட்டி, ஆண்டுக்கு இருமுறை விமான நிலையம் மூடப்படும் என்று அப்போதைய திருவாங்கூா் மன்னா் ஸ்ரீசித்திரை திருநாள் தெரிவித்தாா்.

&w=1200&resize=1200,675&ssl=1)