Last Updated:
கைதான 6 பேரும் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கைதுசெய்யப்பட்ட ஆறு வங்கதேசத்தினர், இந்தியா முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துகள் பதிவிடுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக டெல்லி கியூ பிரிவு காவலர்கள் திருப்பூர் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், திருப்பூரில் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன் பூண்டி பகுதிகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் முறைகேடாக பதுங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மிசானுர் ரகுமான், முகமது ஷபாத், உமர் உட்பட ஆறு பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி வந்ததும் புலனாகியது. அதன்பின் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் ரயில் மூலம் டெல்லி அழைத்துச் சென்றனர்.
#WATCH | Tiruppur, Tamil Nadu | Visuals of the six arrested accused, namely Mizanur Rahman, Mohammad Shabat, Umar, Mohammad Litan, Mohammad Shahid, and Mohammad Ujjal from Tamil Nadu, being taken to Delhi, yesterday.
The six accused were arrested by the Delhi Police. https://t.co/SAkLoE8Bji pic.twitter.com/PykAiqRrOv— ANI (@ANI) February 22, 2026
முதல் கட்ட விசாரணையில் ஆறு பேரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Tiruppur,Tiruppur,Tamil Nadu
Feb 22, 2026 11:50 AM IST


