ஆந்திரா, தெலங்கானாவில் தேர்தல் முடிந்ததால் திருமலையில் ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை ஒட்டி, திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இதனால் தங்குவதற்கு தேவையான அறைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவியதால், பக்தர்கள் திறந்த வெளியிலும், சொந்த வாகனங்களிலும் தங்கி சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 721 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். 50 ஆயிரத்து 599 பக்தர்கள் தலைமுடி சமர்ப்பித்து வேண்டுதல்களை நிறைவு செய்தனர்.
இதையும் படிக்க:
தவெக மாநாட்டில் பங்கேற்பேன் – சீமான் கொடுத்த அதிரடி அப்டேட்
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை காத்திருந்த பக்தர்கள், தற்போது திருமலையை நோக்கி குவியத் தொடங்கியுள்ளனர். நேற்று மட்டும் மூன்று கோடியே 28 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்க பெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக கடந்த மூன்று நாட்களாக ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தங்குவதற்கு தேவையான அறைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் தற்போதைய நிலையில் அறைகள் கிடைக்காத பக்தர்கள் திறந்த வெளி, சொந்த வாகனம் ஆகியவற்றல் தங்கி சாமி கும்பிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 90,721 பக்தர்கள் ஏழுமலையானை வழிப்பட்டனர். 50 ஆயிரத்து 599 பக்தர்கள் தலைமுடி சமர்ப்பித்து வேண்டுதல்களை நிறைவு செய்துள்ளனர். நேற்று மூன்று கோடியே 28 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
