திமுக கூட்டணி கட்சிகள் கருத்து
முன்னதாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்ற பேசிய கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தன. கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஈஸ்வரன் பேசுகையில், ‘அந்த சார்? என்பவர் ஆளுநராக இருந்தாலும், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, பேசினார். அதே போல, காங்கிரஸ் மாநில தலைவரும், சட்டமன்ற குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை பேசுகையில், ‘அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரம், அரசியலாக்கப்படுவது, மிகப் பெரிய கொடுமை’ என்று பேசினார்.

