தமிழகத்தில் ஆயத்த ஆடைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இடமாகத் திருப்பூர் விளங்குகிறது. ஆனால் திருப்பூருக்குப் பிறகு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் உற்பத்தியாகும் இடமாகத் திண்டுக்கல்லில் உள்ள நத்தம் பகுதி விளங்குகிறது.
அகமதாபாத், மும்பை போன்ற வெளி மாநிலங்களிலிருந்து துணிகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு அவை ஆயத்த ஆடைகளாகத் தயாராகின்றன. இதுகுறித்து ஆயத்த ஆடை உற்பத்தியாளர் வினோத் கூறுகையில், “ 20 ஆண்டுகளாக இந்த ஆயத்த ஆடை தொழிலை நாங்கள் செய்து வருகிறோம். சுற்றியுள்ள 20 கிராமங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து வேலை செய்கின்றனர்.
இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த ஆயத்த ஆடை தொழில் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற பல வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுபோல் தமிழ்நாட்டிலும் சேலம், கும்பகோணம், மதுரை, திருச்சி, ஓசூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காட்டன், பாலிஸ்டர் காட்டன், மிக்ஸிங் காட்டன், வைட், மோனோ வைட், பிளைன் சட்டைகள், பிரிண்டட் சட்டைகள், பாலிஸ்டர், பாப்கார்ன் சேட், டிஜிட்டல் பிரிண்டர் சட்டைகள் போன்ற பல வகையான சட்டைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
