Last Updated:
யுபிஐ செயலிகள் திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதியுற்றனர்.
காலை முதலே யுபிஐ செயலிகள் திடீரென முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வருவதாக தேசிய பணப்பரிவர்த்தன ஆணையம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்காக யுபிஐ சேவை நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை முதலே யுபிஐ சேவைகள் கடுமையாக முடங்கின.
யுபிஐ சர்வர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக திடீரென யுபிஐ சேவைகள் முடியங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பணம் டிரான்ஸ்பர் செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், யுபிஐ சர்வர்களில் இடைவிடாது தொழில்நுட்ப பிரச்சினைகள் சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாகவே யுபிஐ சேவைகள் முடிங்கி உள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தணை ஆணையமான என்பிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்பிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில், தொழில்நுட்ப பிரச்சினைகள் சீர் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதமும் இதேபோல் யுபிஐ சேவைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
April 12, 2025 3:57 PM IST


