• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தாய்லாந்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில்மீது கிரேன் விழுந்து கோர விபத்து: 32 பேர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
January 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தாய்லாந்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில்மீது கிரேன் விழுந்து கோர விபத்து: 32 பேர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த ரயில்மீது சரிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு வயது குழந்தையும், 85 வயது முதியவரும் உள்ளனர். ஏழு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து நேரத்தில் அந்த ரயிலில் மொத்தம் 171 பயணிகள் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரேன் ரயில்மீது விழுந்ததால், பல பெட்டிகள் தடம் புரண்டதுடன், ஒரு பெட்டியில் தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரயில், Bangkok-இலிருந்து வடகிழக்கு Ubon Ratchathani மாகாணத்தை நோக்கி பயணித்து வந்தது. அதில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் வேலைக்காக வேறு மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரேன் சம்பவத்துக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று State Railway of Thailand அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த கிரேனை இயக்கி வந்த Italian-Thai Development Company வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

உள்ளூர் ஊடகமான The Nation வெளியிட்ட தகவலின்படி, விபத்து நடந்த நேரத்தில் அந்த கிரேன் ஒரு பெரிய கான்கிரீட் பகுதியை தூக்கி நகர்த்திக் கொண்டிருந்ததாகவும், அது திடீரென ரயில்மீது விழுந்ததால் பல பெட்டிகள் தடம் புரண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிர் தப்பிய ரயில் பணியாளரான திரசாக் வோங்சூங்நேர்ன், கிரேன் விழுந்ததும் பயணிகள் அனைவரும் காற்றில் தூக்கி எறியப்பட்டதைப் போல உணர்ந்ததாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதேபோல், சம்பவத்தை நேரில் பார்த்த மலிவான் நக்தோன் என்ற பெண், “முதலில் சிறிய கான்கிரீட் துண்டுகள் கீழே விழுந்தன. அதன்பின் கிரேன் மெதுவாக சரிந்து, ஒரே நொடியில் ரயில்மீது பலத்த சத்தத்துடன் விழுந்தது. முழு சம்பவமும் ஒரு நிமிடத்திற்குள் நடந்துவிட்டது” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul, விபத்து நடந்த இடத்தை புதன்கிழமை நேரில் பார்வையிட உள்ளார். இந்த விபத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும், அலட்சியம் காரணமாகவே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கிரேன், பாங்காக்கை லாவோஸுடன் இணைக்கும் சீன ஆதரவுடன் நடைபெறும் 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உயர்வேக ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேம்பால ரயில் பாதை அமைக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிகாரப்பூர்வமாக “Bangkok–Nong Khai High-Speed Rail Development for Regional Connectivity” என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் Lam Takhong–Sikhio பகுதியை Italian-Thai Development Company மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் ஆரம்ப மதிப்பு மட்டும் 100 மில்லியன் பாட்டிற்கு மேல் என கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் : அரசு எடுத்துள்ள நடவடிக்கை

Next Post

போலி முதலீட்டு மோசடியால் ஆயுள் சேமிப்பான 500,000 ரிங்கிட்டை இழந்த பகாங் விரிவுரையாளர் | Makkal Osai

Next Post
போலி முதலீட்டு மோசடியால் ஆயுள் சேமிப்பான 500,000 ரிங்கிட்டை இழந்த பகாங் விரிவுரையாளர் | Makkal Osai

போலி முதலீட்டு மோசடியால் ஆயுள் சேமிப்பான 500,000 ரிங்கிட்டை இழந்த பகாங் விரிவுரையாளர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin