தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், பறக்கும் படைகள் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடைமுறையின் போது பணவலிமையையும், உடல் வலிமையும் பயன்படுத்தப்பட்டு, பணம், பரிசுப் பொருட்கள், மது போன்ற இலவச பொருட்கள் மூலம் வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பெறப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்க 5,011 (மேற்கு வங்கத்தில் 2728, தமிழ்நாட்டில் 2,283) பறக்கும் படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகள் நடத்த 5,363 (மேற்கு வங்கத்தில் 3,142 தமிழ்நாட்டில் 2,221) நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் கால பறிமுதல் நிர்வாக முறை செயல்பாட்டுக்கு வந்தபின் 2026 ஏப்ரல் 22 வரையிலான நிலைமை விவரம்:
| ரொக்கம் (கோடி) | மதுபானங்கள் (லிட்டர்/மதிப்பு) | போதைப் பொருட்கள்(கோடி) | உலோகங்கள் (கோடி) | இலவசப் பொருட்கள்(கோடி) | மொத்த மதிப்பு (கோடி) | |
| தமிழ்நாடு | 27.48 | 39,31,463 (102.45) | 108.11 | 55.88 | 178.83 | 472.89 |
| மேற்கு வங்கம் | 100.19 | 1,17,713 (3.85) | 76.72 | 159.31 | 259.14 | 599.24 |
| மொத்தம் | 127.67 | 40,49,176 | 106.3 | 184.83 | 215.19 | 1072.13 |
தமிழ்நாட்டில் ரூ.27.48 கோடி ரொக்கம், ரூ.108.11 கோடி மதிப்பிலான 39,31,463 லிட்டர் மதுபானங்கள், ரூ.108.11 கோடி மதிப்பில் போதைப் பொருட்கள், ரூ.55.88 கோடி மதிப்பில் விலை மதிப்புள்ள உலோகங்கள், ரூ.178.83 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் ரூ.100.19 கோடி ரொக்கம், ரூ.3,85 கோடி மதிப்பிலான 1,17,713 லிட்டர் மதுபானங்கள், ரூ.76.72 கோடி மதிப்பில் போதைப் பொருட்கள், ரூ.159.31 கோடி மதிப்பில் விலை மதிப்புள்ள உலோகங்கள், ரூ.259.14 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு மாநிலங்களிலும் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ.1072.13 கோடியாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் பற்றி பொதுமக்களும்,அரசியல் கட்சிகளும், சி–விஜில் தளத்தில் புகார் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

