Last Updated:
உத்தரபிரதேசத்தில் தயிர் பச்சடி சாப்பிட்ட 250 பேர் ரேபிஸ் தொற்று அச்சத்தின் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமையின் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட தயிர் பச்சடியை சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பீதியில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பதூன் மாவட்டத்தின் பிப்ரவுல் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட தயிர் பச்சடியில் சேர்க்கப்பட்ட தயிர் வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாக செய்தி பரவியது.
இதனால், அதிர்ச்சிக்குள்ளான 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளூர் சுகாதார நிலையத்தில் திரண்டு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறையினர் கிராம மக்களுக்கு ரேபிஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமை மாடு புதைக்கப்பட்டதால் பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும். அதேநேரம், நாய் கடித்து உயிரிழந்த மாட்டின் பாலை காய்ச்சி அருந்தும்போது ரேபிஸ் தொற்று பரவுவதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் இல்லை எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


