Last Updated:
மக்களவையில் பேசிய கமல்ஹாசனின் உரைக்கு மறுப்புத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமன் அலுவலகம் பதிவிட்டுள்ளது.
மாநிலங்களவையில் நிதியமைச்சர் பேசியதாக கமல்ஹாசன் குறிப்பிட்ட இந்தக் கருத்து தவறான தகவல் என்று நிர்மலா சீதாராமன் அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்து.
மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாக உரையாற்றினார். ஆங்கிலத்தில் பேசிய அவர், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றார். தனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா என்றும்
மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் கற்றுக்கொடுத்திருப்பதாகவும் கூறினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி குறித்துப் பேசிய கமல், தாங்கள் வாக்களிக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால், தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி தங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குவதாகக் கவலை தெரிவித்தார். வாக்காளர் படிவத்தில் உள்ள எழுத்துப் பிழைகளை தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை என்றும் இதனால், பிகார் ‘வாழும் பிணங்களின்’ பூமியாக மாறிவிட்டதாகவும் காட்டமாக விமர்சித்தார்.
தொடர்ந்து தமிழில் உரையாற்றிய கமல், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். அது ஓரளவு உண்மைதான் என்றும் தெரிவித்தார். எந்த அரசாங்கமும் ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்க முடியாது என்றும் கமல்ஹாசன் திட்டவட்டமாகக் கூறினார்.
இந்நிலையில் மக்களவையில் பேசிய கமல்ஹாசனின் உரைக்கு மறுப்புத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன் அலுவலகம், கடந்தாண்டு மார்ச் மாதம், பெரியாரின் கூற்றையே நிதியமைச்சர் மேற்கோள் காட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளது. எனவே, யாசகம் எடுக்கக் கூட தமிழ் உதவாது என்பது நிர்மலா சீதாராமனின் சொந்த கருத்து அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Feb 05, 2026 12:36 PM IST
”தமிழ் குறித்து பேசியது சொந்த கருத்து அல்ல” கமல்ஹாசன் உரைக்கு நிர்மலா சீதாராமன் தரப்பு பதில்


