இதுவரை நடந்ததாக தெரியவில்லை
“இந்திய அரசின் தரப்பில், வெளியுறவுத்துறை, மீன் வளத்துறை அதிகாரிகள் நான்கு பேரும், இலங்கை அரசின் தரப்பில், நான்கு பேரும் இணைந்து, ஒரு குழு அமைத்து, தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருகிறோம்” என்று சொன்னாரே தவிர, ஆனால், இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை! அதற்கு முதலில், தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்கவேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே, இதில் நீங்கள் தான் நேரடியாக தலையிட்டு தீர்க்கவேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் – கைது செய்யப்படுவதும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது! இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்! என தெரிவித்து உள்ளார்.

