Last Updated:
குஜராத் கடற்கரை அருகே 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள்கள் சிக்கின. பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற கும்பல் மீது விசாரணை நடக்கிறது.
குஜராத் கடற்கரை அருகே நடந்த சோதனையில் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் சிக்கின.
இந்திய கடல் எல்லைப்பகுதியில் பெருமளவு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கடலோர காவல் படையினருக்கு கிடைத்தது. இதையடுத்து கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய கடலோர காவல்படை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப்படையினர் இணைந்து கூட்டாக சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 13 ஆம் தேதி அதிகாரிகளை கண்டதும், கடத்தல் கும்பல் போதைப்பொருள்களை கடலில் வீசிவிட்டு தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடலில் வீசப்பட்ட போதைப்பொருள்களை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட போதைப்பொருள்களின் எடை 300 கிலோ என்றும், சிக்கியது மெத்தம்பேட்டமைன் வகையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாட்டுக்கு போதைப்பொருள்கள் கடத்த இருந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடத்தல் கும்பல் குறித்து பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். போதைப்பொருள்கள் கடத்தல் கும்பல் மீது தங்கள் அரசு இறக்கம் காட்டாது என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
April 15, 2025 7:56 AM IST
தமிழ்நாட்டுக்கு கடத்தவிருந்த ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள்.. மடக்கி பிடித்த கடலோர காவல்படை!


