Last Updated:
Cauvery Water Management | தமிழ்நாடு, காவிரி நீர் மேலாண்மை ஆணையில் செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய நீரை கர்நாடகா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு வலியுறுத்தி உள்ளது.
டெல்லியில் 43வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
அப்போது, மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93 டி.எம்.சி. ஆக உள்ளதாகவும் நடப்பாண்டு 5 முறை முழு கொள்ளளவை எட்டியதாகவும் அவர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 684 கனஅடியாக உள்ளதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 850 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாகவும் கூறினர்.
Bangalore,Karnataka
August 26, 2025 8:30 PM IST
“தமிழ்நாட்டிற்கு செப்டம்பரில் நீர் வழங்குவதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்” – காவிரி ஆணையம் வலியுறுத்தல்


