அண்ணாமலைக்கு சீமான் பதில்
அண்ணாமலையை “தம்பி” என்று குறிப்பிட்டு, “என் தம்பி சொல்றாரு, ‘நான் இந்தியத்திலிருந்து தமிழை பார்க்கிறேன்.’ நான் தமிழகத்திலிருந்து தேசியத்தை பார்க்கிறேன். நான் என் தம்பிக்கு ஒரு விஷயம் சொல்றேன், நான் முதல்ல என் அம்மாவுக்கு மகனா இருக்கேன், அப்புறம் அத்தைக்கு மருமகனா இருக்கேன். இந்த தேசம் நல்லா இருக்கணும்னா, இந்த நாடு நல்லா இருக்கணும்னா, முதல்ல என் வீடு நல்லா இருக்கணும். என் வீடு நல்லா இருக்கணும், உன் வீடு நல்லா இருக்கணும், அவர் வீடு நல்லா இருக்கணும். எல்லா வீடும் நல்லா இருந்தால் நாடு நல்லா இருக்கும். அவ்வளவுதான்,” என்று முடித்தார்.

