இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் சற்று முன்னர் (14.12.2024) ஆரம்பமாகியுள்ளது.
வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குத்தெருவில்
அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுவருகின்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்
இக்கூட்டத்தில், செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன்,
ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன்,
சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, த.கலையரசன், ஞா.சிறிநேசன்,
மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு
கூடியுள்ளது.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |





&w=1200&resize=1200,675&ssl=1)