பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்விப் பிரிவுகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

