• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்? ரயில்வே அமைச்சர் பதில்

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்? ரயில்வே அமைச்சர் பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கும், நிலுவை திட்டங்களுக்கும் ரயில்வே துறை முழுமையாக நிதி வழங்குகிறதா என்றும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தென்னக ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுடன் தொடர்புடையவை. முந்தைய இரு நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிகழ் நிதியாண்டில் ஏழு மடங்கு அதிகமாக ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி 10 புதிய பாதை, 3 அகல ரயில் பாதை மாற்றும் திட்டம், 9 இரட்டைப்பாதை திட்டம் என மொத்தம் 2,587 கி.மீ. தூரத்துக்கு ரூ.33,467 கோடி மதிப்பில் தமிழகத்தில் முழுமையாகவோ பகுதியளவோ உடைய திட்டங்கள் பல நிலைகளில் நடக்கின்றன. இதில் 665 கி.மீ தூரத்துக்கான பணிகள் ரூ.7,153 கோடி செலவினத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

ரயில் திட்டங்களை செயல்படுத்தும் நிலத்தை கையகப்படுத்தும்போது அதை மதிப்பிட்டு இழப்பீட்டுத்தொகையை ரயில்வே துறையிடம் மாநில அரசு தெரிவிக்கும். அந்தத் தொகையை மாவட்ட நிலம் கையகப்படுத்துதல் ஆணையத்தின் கணக்கில் ரயில்வே துறை டெபாசிட் செய்யும். மாநில அரசின் ஆதரவில்தான் இத்திட்டங்களின் வெற்றி அடங்கியுள்ளது. அந்த வகையில் திண்டிவனம்-திருவண்ணாமலை (185 கி.மீ. புதிய பாதை) திட்டத்துக்கு தேவைப்படும் 273 ஹெக்டேர் நிலத்தில் 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

Previous Post

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறப்பு

Next Post

இலங்கையில் கனமழை, வெள்ளம் – 4 பேர் பலி | Makkal Osai

Next Post
இலங்கையில் கனமழை, வெள்ளம் – 4 பேர் பலி | Makkal Osai

இலங்கையில் கனமழை, வெள்ளம் - 4 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin