2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மீண்டும் கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகி வருகிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட அதிமுக பெறாதநிலையில் கட்சிக்குள் இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர் தோல்வி
எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதால் இந்த அதிருப்தி நிலவியுள்ளது. இதனால் அதிமுகவின் 28 முதல் 37 எம்.எல்.ஏ-க்கள் வரை விஜய்க்கு ஆதரவு அளிக்க ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இந்த குழுவினர் வழிநடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
விஜயை சந்திக்கும் சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள்
இந்நிலையில் இன்று இரவு விஜய்யை சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் மண்டபத்தில் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

