இந்நிலையில், சிறுமிகள் தப்பியோடிய 2 மணிநேரத்திற்குள் 7 பேர் உல்ஹாஸ்நகரின் இரு வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, காப்பகத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர். மேலும், தப்பியோடிய மற்றொரு சிறுமியைத் தற்போது தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் அப்பகுதியின் புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்னரே தேடுதல் வேட்டையைத் துவங்கியதினால் அந்த 7 சிறுமிகளும் மீட்கப்பட்டதாகவும் இல்லையென்றால் அவர்கள் அதில் ஏறி தப்பித்திருக்கக் கூடும் என அவர் கூறினார்.
பின்னர் சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களை காப்பகத்தில் தங்கவைத்திருப்பது பிடிக்காததினாலே அவர்கள் தப்பிச் சென்றதாக கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியின் ஹில் லைன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

