Last Updated:
ஆந்திர மாநிலம் அமராவதி அருகே வெலகபூடியில் எல் அண்ட் டி கிடங்கில் தீ விபத்து, பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து, 20 அடி உயரத்திற்கு தீப்பிழம்பு. தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
ஆந்திர மாநிலம் அமராவதி அருகே உள்ள வெலகபூடியில், எல் அண்ட் டி நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பற்றி எரிந்ததால், சுமார் 20 அடி உயரத்திற்குத் தீப்பிழம்பும், அடர்ந்த கரும்புகையும் சூழ்ந்தது.
ஆந்திர மாநிலம் அமராவதி அருகே உள்ள வெலகபூடியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. அங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பிளாஸ்டிக் பைப்புகள் ஆகியவை பெரும் அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அந்த கிடங்கில் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு தீ சுமார் 20 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எறிந்தது.
பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் இருந்த காரணத்தால் அடர்ந்த கரும்புகை விண்ணை மட்டும் அளவில் பரவியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாசிப்பதற்கு இடையூறுகள் ஏற்பட்டன. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தனியார் நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து.. 20 அடி உயரத்திற்கு எழும்பிய தீப்பிழம்பால் பரபரப்பு!


