பயனாளிகளிடமிருந்து ரேஷன் அரிசியை கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.16 வரை வாங்கி, இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்வதாக நாங்கள் அறிந்தோம். இடைத்தரகர்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.22 முதல் ரூ.23 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்த நிலையில் அவர்கள் கிலோவுக்கு ரூ.27 வரை விற்பனை செய்தனர்.
இந்த மோசடியில் சதீஷ் அகர்வால் மற்றும் ஐந்து பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக மாரு தெரிவித்தார். சதீஷ் அகர்வாலுக்கு இதற்கு முன்பு மூன்று முறை அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கவும்: இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!

