சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தகவல் மற்றும் மின்னணு மேம்பாட்டு அமைச்சர் திருமதி. ஜோசபின் தியோ கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமானது ஒருவரின் விவரத்தை பயன்படுத்தி அவரைப் போலவே எழுதவும் பேசவும் வைக்க முடியும். மேலும் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் கூட எளிதில் மோசடி கும்பலால் கைப்பற்றப்படும். இது ஒருவரின் குரலை படித்து அப்படியே அவர்களைப் போலவே பேசும் ஆற்றல் கொண்டதால் குற்றவாளிகள் கூட தப்பிக்க வாய்ப்புண்டு. மேலும் நிரபராதிகள் கூட தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.

&w=1200&resize=1200,675&ssl=1)