அவர் இந்த தகவலை அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அவரை பேட்டி எடுத்தப்போது பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பேசிய அவர், தனக்கு ஏறக்குறைய 12 அல்லது 13 வயது இருக்கும், அப்போது பயிற்சி தலைவரின் காலை தொட்டு வணங்காத காரணத்தால் தன்னை அண்டர் 14 தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். அது அவருக்கு முதல் அண்டர் 14 தொடர் என்று கூறினார்.அன்று முதல் அவர் யார் காலிலும் விழக்கூடாது என்றும் தன் காலிலும் யாரும் விழக்கூடாது எனவும் முடிவெடுத்தாக கூறினார்.
தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராகவும் உள்ளார்.
கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பெற்று ப்ளே ஆப் சுற்றிக்கு முன்னேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

