இலங்கையின் பிரதான மூத்த ஊடகவியலாளராக இருந்த லசந்த விக்ரமதுங்க கொலைசெய்யப்பட்ட விடயம் தனிப்பட்ட அரசியல் குற்றச்சாட்டு சம்பவம் என ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று தனது விசேட உரையின்போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
லசந்த விக்ரமதுங்கவின் கொலை எவ்வாறு இடம்பெற்றது. அவர் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்துவைக்கப்பட்டார் என அறிக்கை இடப்பட்டுள்ளது.
அது என்ன நாட்டுக்கு நல்லவற்றை செய்த ஒரு ஊடகவியலாளர் மீதான வீரோத போக்கு.
லசந்த விக்ரமதுங்க, முந்தைய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தாக்கப்பட்டார்.
உபாலி தென்னகோன் அவரை தடுத்துவைத்தார் .அரசியல் இயக்கத்துக்கான அவர்களின் அரசியல் லாபத்துக்கான படுகொலை இது.
தாஜுடின் கொலை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அப்படிதான் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தை நன்மை நிலைக்கு செயற்படவேண்டியவர்கள் தான்தோற்றி தனமாக கொலை குற்றங்களை முன்னெடுத்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி சானி அபேசேக்கர மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சியின் விரோதிகளாக மாறியுள்ளனர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்” என கூறியுள்ளார்.

