• Login
Sunday, January 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தங்கம் எடுக்க ஆர்வம்: கிளந்தானில் 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 9, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தங்கம் எடுக்க ஆர்வம்: கிளந்தானில் 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா பாரு:

கிளந்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாரம்பரிய முறையில் தங்கம் எடுக்கும்’ (Gold Panning) உரிமத்தைப் பெற இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் மற்றும் பகுதிநேரத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாகத் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் ஃபட்லி ஹசன் தெரிவித்துள்ளார்.

இந்த உரிமத்தைப் பெற விண்ணப்பக் கட்டணமாக RM100 மற்றும் உரிமம் அங்கீகரிக்கப்பட்ட பின் ஆண்டு கட்டணமாக RM100 வசூலிக்கப்படுகிறது.

இந்த உரிமம் கிளந்தான் மாநில மக்களுக்கு மட்டுமே (Residents only) வழங்கப்படும். மேலும், தங்கம் எடுப்பதற்கு நவீன இயந்திரங்களையோ அல்லது நவீன தொழில்நுட்பங்களையோ பயன்படுத்த அனுமதி இல்லை. பாரம்பரிய ‘பேன்’ (Pan) முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தங்கம் எடுப்பதற்கான அதிகாரப்பூர்வ இடங்கள் வரும் புதன்கிழமை (ஜனவரி 14) அறிவிக்கப்படும். முதற்கட்டமாக பின்வரும் நான்கு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன:

குவா மூசாங் (Gua Musang), ஜேலி (Jeli), தானா மேரா (Tanah Merah)ம், கோலா கிராய் (Kuala Krai) என்பன பரிந்துரைக்கப் பட்டன.

மேலும் தங்கம் எடுக்கும் பணி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

கண்டெடுக்கப்படும் தங்கத்தை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் மையங்களில் மட்டுமே விற்க வேண்டும். மேலும் இந்த உரிமம் மாற்றத்தக்கது அல்ல (Non-transferable) மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கை மூலம் மாநிலத்தின் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்துவதோடு, சட்டவிரோதத் தங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் கிளந்தான் அரசு திட்டமிட்டுள்ளது.



Read More

Previous Post

அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

Next Post

84 ஆண்டுகளுக்கு ஒருமுறை: பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தில் செல்வம் குவியும் 3 ராசிகள்!

Next Post
84 ஆண்டுகளுக்கு ஒருமுறை: பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தில் செல்வம் குவியும் 3 ராசிகள்!

84 ஆண்டுகளுக்கு ஒருமுறை: பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தில் செல்வம் குவியும் 3 ராசிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin