Last Updated:
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் பாரம்பரியமாகத் தங்கம் மற்றும் ஆபரணங்கள் மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு மாறுபட்டு, மக்கள் தங்கள் பணத்தை மதுபானங்களுக்காக அதிகம் செலவிடத் தொடங்கியுள்ளனர் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ‘யுனிஃபி கேபிட்டல்’ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழக்கமாக ஆபரணங்களின் சந்தை மதிப்பு ஆண்டுக்குச் சுமார் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் என்ற அளவில் இருந்து வருகிறது. ஆனால், சமீபத்திய தகவல்களின்படி இந்தியர்கள் ஆபரணங்களுக்குச் செலவிட்ட தொகையை விட மதுபானங்களுக்குச் செலவிட்ட தொகையின் அளவு உயர்ந்து அதை முந்தியுள்ளது.
பாரம்பரியமாகத் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகவும், திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்கான கலாச்சார அங்கமாகவும் கருதி வந்த இந்திய நுகர்வோரிடம், தற்போது பொழுதுபோக்கு, சோஷியல் மீட்டிங் செலவுகள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்கள் வெறும் 18% பங்கைக் மட்டுமே கொண்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் விற்பனையாகும் மொத்த மதுபானத்தின் மதிப்பில் 50%-ஐ இந்தத் தென்னிந்திய மாநிலங்களே நுகர்கின்றன.
அதாவது வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சேர்ந்து வாங்கும் மதுபானத்தின் மதிப்புகளுக்குச் சமமாகத் தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமே மதுபானங்களை வாங்குகின்றன. இது பொதுமக்களின் பொதுவான கணிப்பிற்கு முற்றிலும் மாறான ஒன்றாக இருக்கிறது. மேலும், தென்னிந்திய மாநில அரசுகளின் கலால் துறை (State Excise) வருவாயிலும் இது பெரும் பங்கை வகிக்கிறது.
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்குத் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ‘மருத்துவச் சுற்றுலா’ (Medical Tourism) மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.


