Last Updated:
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தக்காளி, சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்து வந்து மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தக்காளி, சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்து வந்து மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தக்காளி விலை கிலோ ரூ.6 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
தக்காளி விலை அதிகமாக இருக்கும் போது பசுமை குடில் அமைத்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர். தக்காளி, சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் கண்டு கொள்வதில்லை. எனவே பசுமை குடில் அமைத்து தக்காளி விலையை முடிந்தவரை குறைந்தபட்ச ஆதார விலையாக 30 ரூபாய் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Namakkal,Tamil Nadu
