ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. அப்போது, இந்தியா போா் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்திய எல்லைப் பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.