டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்-ன் மகளும் தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்ற காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அமலாக்க துறைக்கு அனுமதி அளித்தது.
விசாரணைக்காக டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவின் நீதிமன்ற காவல் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்ற அமலாக்க துறையின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனவே டெல்லி சிறப்பு நீதிமன்றம் கவிதாவின் நீதிமன்ற காவலை இம்மாதம் 23-ம் தேதி வரை நீட்டித்தது.
இதனிடையே திஹார் சிறையில் இருந்த கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கவிதாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு தரவில்லை எனவும் விசாரணைக்கு மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். கைது செய்யப்பட்டதே சட்டவிரோதமானது என கவிதா தாரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கவிதாவை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க அனுமதி வழங்கியது.
சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கவிதா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் வரும் 23-ம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
