Last Updated:
கடந்த நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக ஐநா பாதுகாப்பு சபையின் தடைகள் கண்காணிப்புக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தடைகள் கண்காணிப்புக் குழு, ஐநா பாதுகாப்பு சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, கடந்த நவம்பரில் டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசார், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவ ‘ஜமாத்-உல்-முமினத்’ (Jamaat ul-Muminat) என்ற புதிய பெண்கள் பிரிவைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல், செங்கோட்டை தாக்குதல் மூலம் அந்த அமைப்பு இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருவது இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.


