Last Updated:
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு, உமர் நபி மற்றும் முஜாமில் தொடர்பு, Mahipalpur Radisson Hotel அருகே வெடிச்சத்தம் அதிர்ச்சி.
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லியில் இன்று காலை வெடிச்சத்தம் கேட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 13 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியானது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் நபி பயன்படுத்தியதாக கூறப்படும் ஈகோ ஸ்போர்ட் கார், ஹரியானாவின் Khandawali பகுதியில் சிக்கியது.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னர், அஷாப் அலி சாலையில் உள்ள மசூதியில் உமர் நபி தங்கியதும், அங்கிருந்து வெளியேறிய பின்னர் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரம் காரை நிறுத்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஃபரிதாபாத்தில் சுமார் 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை பதுக்கியதாக கைது செய்யப்பட்ட மருத்துவர் முஜாமிலின் செல்போனை ஆய்வு செய்ததில், அதன் சிக்னல் பலமுறை செங்கோட்டை பகுதியில் பதிவானது தெரியவந்துள்ளது.
அவர் தனது கூட்டாளியான உமர் நபியுடன், செங்கோட்டை பகுதிக்கு பலமுறை வந்தது அங்கிருந்த சிசிடிவிக்களில் பதிவாகி உள்ளது. கடந்த குடியரசு தினத்தன்று நடத்த இருந்த தாக்குதல் கடுமையான பாதுகாப்பு காரணமாக தோல்வியில் முடிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, டெல்லியில் மற்றொரு இடத்தில் வெடிச்சத்தம் கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே வெடிச்சத்தம் கேட்டது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு காலை 9:18 மணிக்கு தகவல் கிடைத்தது, மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து அதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு விவரம் குறித்து வெடிச்சத்தம் எதனால் கேட்டது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Delhi,Delhi,Delhi
November 13, 2025 10:12 AM IST


