Last Updated:
டெல்லியில் நடைபயிற்சிக்குச் சென்ற தமிழ்நாடு எம்.பி சுதாவின் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். சுதாவிற்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் காலையில் நடைபயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டு எம்.பி சுதாவிடம் கழுத்தில் இருந்த நகையை ஸ்கூட்டியில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் எம்.பி சுதாவிற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் காங்கிரஸ் எம்பி சுதா தங்கி உள்ளார். எம்.பி சுதா டெல்லியில் இன்று நடைபயிற்சிக்கு சென்ற போது காலை சுமார் 6.20 மணியளவில் ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதில் அவரது ஆடையும் கிழிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பாதுகாப்புகள் நிறைந்த பகுதியில் எம்.பியின் நகையை மர்மநபர்கள் பறித்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் எம்.பி சுதாவிடம் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றனர்.
August 04, 2025 8:55 AM IST


