Last Updated:
டெல்லியில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.தீயணைப்பு துறையினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மால்வியா நகரில் உள்ள லெமன் க்ரீன் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், “மால்வியா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் காலை தீ விபத்து ஏற்பட்டது. காலை 09:45 மணியளவில் டெல்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், உணவகத்தின் அடித்தளத்தில் சிக்கியிருந்த மூன்று பேர் உட்பட மொத்தம் 11 பேரை மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக ‘கேட்ஸ்’ ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
டெல்லி தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு மாநில அரசு உரிய நேரத்துக்குள் தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
Jun 03, 2026 12:41 PM IST


