• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20-ன் சிறந்த பவுலருக்கே இந்த கதி! – ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் அர்ஷ்தீப் சிங் | fate of the best bowler in indian team at T20 explained

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி20-ன் சிறந்த பவுலருக்கே இந்த கதி! – ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் அர்ஷ்தீப் சிங் | fate of the best bowler in indian team at T20 explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கவுதம் கம்பீர் வந்த பிறகே அவர் யாரை உட்காரவைத்து உட்காரவைத்து மீண்டும் அணியில் எடுக்கிறாரோ அவர்கள் கம்பீருக்கு பாடம் புகட்டுமாறு தங்கள் செயல் திறனை நிரூபித்து வருகின்றனர். நேற்று அப்படி நிரூபித்தவர்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இன்னொருவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர்.

ஆகவே, உட்கார வைத்து எடுத்தால் நன்றாக ஆடுவார்கள் என்று இதற்கு கம்பீர் சப்பைக் கட்டுக் கட்ட முடியாது. மாறாக, ஏன் அணியை இப்படி நிரந்தரமில்லாத அந்தரங்க நூல் போல் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே கேள்வி. இவையெல்லாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரை தெரியாது, ஒருமுறை தொடர் தோல்விகளைச் சந்திக்கும்போது கம்பீரின் சாயம் வெளுக்கும்.

டி20-யில் அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் ஆகச் சிறந்த பவுலர். 66 போட்டிகளில் 104 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 50 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் இந்திய பவுலர்களில் டி20-யில் குல்தீப் யாதவ் மட்டுமே அர்ஷ்தீப்பை விட நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர். இன்னொரு கோடரி விழும் வீரர் குல்தீப் யாதவ். இப்படியிருந்தும் அர்ஷ்தீப் சிங் டி20 அணியில் ரெகுலர் என்று கூற முடியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று ஹோபார்ட்டில் அர்ஷ்தீப் சிங் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவரும் ட்ராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஷ் ஆகிய அபாய அதிரடி வீரர்களை சடுதியில் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார். அர்ஷ்திப் முதல் 2 போட்டிகளில் இல்லை.

வேடிக்கை என்னவெனில் அர்ஷ்தீப், வாஷிங்டன், குல்தீப் போன்றோர் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அரிய வாய்ப்புகளிலும் நிரூப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது சில வீரர்கள் கேள்வியின்றி தோல்வி அடைந்தாலும் அணியில் நீடிக்கின்றனர். உதாரணமாக ஷுப்மன் கில். ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல். இதில் அக்சர் படேல் ஏதோ ஒரு விதத்தில் இன்றியமையாதவர் ஆகிவிட்டார்.

ஷுப்மன் கில் சொல்லி சொல்லி தோல்வியடைந்தாலும் அணியில் நீடிப்பார். ஆனால் சஞ்சு சாம்சனை ஒருவழியாக மெல்ல மெல்ல டவுன் ஆர்டரை மாற்றி, அதை இதை மாற்றி ஒழித்தாகிவிட்டது.

அதாவது ஒரு வீரர் அணிக்கு இன்றியமையாதவராக மாறும்போது கம்பீர் அவர் டவுன் ஆர்டரை மாற்றி அவரை ஃபெயில் ஆக்கி கடைசியில் டீமை விட்டுத் தூக்கி விடுவார். இதுதான் கம்பீரின் டெக்னிக். இதுதான் சாம்சனுக்கு நடந்தது. குல்தீப்புக்கு நடந்து கொண்டிருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் அந்த தீய டிசைனின் உள்ளேதான் இருக்கிறார்.

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்றால், பேட்டிங் டெப்த் வேண்டும் என்கிறார்கள். ஏன் ஒரு 5-6 டாப் வீரர்களை உறுதியாகத் தயார் செய்ய முடியவில்லை? இவர்களது இந்த இயலாமைக்கு சிலபல வீரர்கள் பலியாக வேண்டியதாயிருக்கிறது.

நேற்று ஷிவம் துபேவை சொல்லி சொல்லி அடிக்கின்றனர், அவருக்குப் பவுலிங், ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு பவுலிங் தரவில்லை. அதாவது சுந்தருக்குப் பவுலிங் கொடுத்து அவர் அதில் சிறப்பாகச் செயல்பட்டால் அவரை பேட்டிங்குக்காக அல்லாமல் பவுலிங்குக்காகவே அணியில் வைத்திருக்க நேரிடும். இதைத் தவிர்ப்பதற்காக அவரை நேற்று பேட்டிங்கில் முன்னால் களமிறக்கினர். அவரும் வெற்றி பெறச் செய்தார்.

ஆனால், அடுத்த போட்டிக்கு வாஷிங்டன் சுந்தரின் இடம் நிச்சயமற்றது. அர்ஷ்தீப்பின் இடமும் அப்படித்தான். ஏன் ஷுப்மன் கில்லையோ, சூரியகுமார் யாதவையோ, திலக் வர்மாவையோ காப்பாற்ற விளிம்பு வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்? ஒரு டாப் 5 வீரர்களைத் தயார் செய்யலாமே. பிரியவன்ஷ் ஆர்யா, சூரியவன்ஷி, பிரப்சிம்ரன் என்று வீரர்களுக்கா பஞ்சம்? ஆனால் ஷுப்மன் கில்லை 3 வடிவ கேப்டனாக்கி விட வேண்டும். ஏன் இந்த அவா? குஜராத் டைட்டன்ஸ் லாபி இல்லை என்று கூற முடியுமா?

கிரெக் சாப்பல் – ராகுல் திராவிட் கூட்டணி அணியில் பேட்டிங் வரிசையில் 3-ம் நிலையில் பரிசோதனையாக மாற்றம் செய்தார்கள், ஆனால் ஒரு மையமான 5 வீரர்களை டாப்பில் மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பரிசோதனைகள் செய்தனர். ஆனால் இன்றோ தகுதியால் அன்றி வேண்டப்பட்டவரை அணியில் நிரந்தரமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மற்றவர்களை சுழற்சி முறை என்று கூறிக்கொண்டு அவர்களுக்கு கணிசமான போட்டிகளில் வாய்ப்புக் கொடுக்காமல் விட்டு விட்டு கொடுப்பது என்று போய்க் கொண்டிருக்கிறது. இதனால் வீரர்களின் திறமை அழிக்கப்படுமே தவிர வளராது.



Read More

Previous Post

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு | Terrible accident as tipper truck hits bus in Telangana 20 people killed

Next Post

சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம் | Girls Paper Bag Startup

Next Post
சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம் | Girls Paper Bag Startup

சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம் | Girls Paper Bag Startup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin