இந்திய ஆடவர் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக 2026 ஆம் ஆண்டு வரை சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்ட நிலையில் இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள், 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏற்கனவே டி 20 வகை போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் டி20 ஆடவர் அணிக்கு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க தேர்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் சூர்யகுமார் யாதவை நியமிக்க அணி வீரர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க:
இந்தியாவுக்கு கிடைத்த புதிய பும்ரா… ஆட்டம் காணும் சிராஜ் இடம்!
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும் எதிர்வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியை கே.எல் .ராகுல் வழி நடத்துவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)