டி20 உலகக் கோப்பை தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதப்போவது இல்லை என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீர கணித்துள்ளார்.
ஐசிசி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்காவும், மேற்கு இந்திய தீவுகளும் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-யில் இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் வரும் ஜூன் 9ஆம் தேதி மோதவுள்ளன. இந்நிலையில், அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோத வாய்ப்பில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் கணித்துள்ளார்.
அதாவது, 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் தான் அரையிறுதிக்குள் நுழையும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இருக்கும் மைதானங்கள் கடினமானதாக இருக்கும் என்றும், பவுண்டரிகள் அடிப்பே சிக்கலானது என்றும் கூறியுள்ளார்.
எனவே, இந்த முறை இங்கிலாந்து கடும் சவாலை எதிர்கொள்ளும் என்றும், கடந்த முறையைப் போலவே, இம்முறையும் இங்கிலாந்து அணியே கோப்பையை வெல்ல வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
