Last Updated:
இங்கிலாந்து அணிக்கு எதிரான மேட்ச்சில் நேபாள அணி 180 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 17 ஆவது போட்டியாக குரூப் சி பிரிவில் இத்தாலி மற்றும் நேபாள அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, நேபாள அணியில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஆசிப் ஷேக் 20 ரன்களும், கேப்டன் ரோஹித் படேல் 23 ரன்களும், ஆரிப் ஷேக் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நேபாள அணி 123 ரன்கள் எடுத்தது.
இத்தாலி தரப்பில் கிரிஷன் கலுகமாகே 3 விக்கெட்டுகளையும், பென் மனேட்டி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இத்தாலி அணியின் பேட்ஸ்மேன்கள் சகோதரர்களான ஜஸ்டின் மோஸ்கா, ஆண்டனி மோஸ்கா களம் இறங்கினர்.
மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், வாய்ப்புள்ள பந்துகளை சிக்சரும் பவுண்டரியுமாக மாற்றியனர். ஜஸ்டின் 41 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரியுடன் 59 ரன்களும், ஆன்டனி மோஸ்கா 31 பந்துகளில் 6 சிக்சர் 3 பவுண்டரியுடன் 61 ரன்கள் சேர்க்க 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இத்தாலி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மேட்ச்சில் நேபாள அணி 180 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் நேபாளம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இத்தாலி அணி பவுலிங் மற்றும் பேட்டிங் திறமையால் நேபாள அணியை அதிரடியாக வென்றுள்ளது.


