உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் 2 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கடந்த 2024 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
அயோத்தி வழக்கு, அரசியலமைப்பின் 370-வது பிரிவு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர் ஓய்வு பெற்றும் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.