Last Updated:
2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நிகரான டிஜிட்டல் பார்வைகளை, மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது.
மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ரிச்சா கோஷிற்கு டி.எஸ்.பி. வேலையும் ரூ. 34 லட்சத்திற்கான ரொக்க பணமும் வழங்கி மேற்கு வங்க அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஏறக்குறைய 3 லட்சம் ரசிகர்கள் நேரில் சென்று போட்டியை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடருக்கும் இவ்வளவு ரசிகர்கள் வந்ததில்லை. இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.
அதே போல, 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நிகரான டிஜிட்டல் பார்வைகளை, மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது. இந்தியா கோப்பை வென்ற இந்த இரு போட்டிகளும் ஹாட்ஸ்டாரில் மொத்தமாக 18 கோடியே 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.
இதற்கிடையே உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிர அரசு தங்கள் மாநில வீராங்கனைகளுக்கு ரூ. 2.50 கோடி ரொக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்த நிலையில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு இறுதிப் போட்டியில் 34 ரன்கள் எடுத்த ரிச்சா கோஷை மேற்கு வங்க அரசு பாராட்டியுள்ளது. அவருக்கு ரூ. 34 லட்சத்திற்கான ரொக்கப் பணத்துடன், டி.எஸ்.பி. ரேங்க் அளவிலான அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது.
November 08, 2025 9:42 PM IST


