அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் முன்னாள் அதிபர் டிரம்புக்கு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் மாதந்தோறும் 376 கோடி ரூபாய் நிதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பும் மீண்டும் களம் காண அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் டிரம்ப் போட்டியிடுவதற்காக அரசியல் செயல் குழு எனப்படும் PAC அமைப்புக்கு இதுவரை 73 கோடியே 55 லட்சம் ரூபாய் பணம் நிதியுதவியாக கிடைத்துள்ளது. அதே நேரம் தற்போதைய அதிபர் பைடனுக்கு குறைவான அளவு நிதியே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், PAC அமைப்புக்கு மாதந்தோறும் 376 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர்கள் ஜோ லாண்ஸ்டேல்(joe Lonsdale) கிரிப்டோ கரன்சியில் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்த கேமரூன் விங்க்லெவோஸ்( Cameron Winklevoss) ஆகியோரும் டிரம்புக்கு அதிக நன்கொடையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை அளித்துள்ளனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
