அட்மிரல்டி சாலையில் டிரக், லாரி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் தொடர்புடைய விபத்தில் 30 வயது ஆடவர் உயிரிழந்தார்.
கடந்த ஜூன் 20, வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் 3:15 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரி: ரூ.83 கோடியை அலேக்கா தூக்கிய ஒரே நபர்
இதில் 30 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆகியவை கூட்டாக தெரிவித்தன.
விபத்தில் சிக்கிய மற்றொரு 56 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
என்ன நடந்தது?
30 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் சக ஊழியர் ஒருவர் இது பற்றி கூறுகையில்; அவர்கள் இருவரும் வேலை முடிந்து ஜோகூர் பாருவுக்கு திரும்பிச் செல்ல மோட்டார் சைக்கிள்களில் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்றார்.
மேலும், விபத்தில் மரணித்த ஆடவர் அருகில் சென்ற டிரக்கிற்கு மிக அருகில் வண்டியை ஓட்டிச் சென்றதாக அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

“என்ன காரணம் என்று தெரியவில்லை, மோட்டார் சைக்கிள் டிரக்குடன் சிக்கிக்கொண்டது” என்றும் அவர்கள் கூறினர்.
இதன் காரணமாக ஆடவர் சமநிலையை இழந்து தரையில் விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக, டிரக்கின் கீழே அவர் இழுத்துச் செல்லப்பட்டதால், தலையில் டிரக் ஏறியதாக அவரின் சக ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Photo: Shin Min Daily News

