டிஜிட்டல் ரூபாய்.. மோடி அரசின் மெகா திட்டம்.. சீனாவும், ரஷ்யாவும் ஓகே சொல்லிட்டா போதும்.. நடப்பதே வேற!
கிரிப்டோகரன்சிக்கு இணையாக விர்ச்சுவல் ரூபாய்-யை உருவாக்கியுள்ள இந்திய ரிசர்வ் வங்கி பலகட்ட ஆய்வுகள், பயன்பாட்டு முறைகளை கண்டறிந்து இதை பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலான பேமெண்ட் முறையில் பயன்படுத்தலாமா என்ற முக்கியமான யோசனையை மோடி தலைமையிலான அரசு கொண்டு செல்ல உள்ளது.
அடுத்த மாதம் டெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கூட்டம் நடக்க உள்ளது, இக்கூட்டத்தில் இந்தியா பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் கிராஸ் பார்டர் டிஜிட்டல் பேமெண்ட், சென்டரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்து முறையை முன்வைக்க உள்ளது.

பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் நிலையான வர்த்தகம், வர்த்தக முறையை உருவாக்க வேண்டும் என்பதில் அதன் உறுப்பின நாடுகள் மிகவும் தீவிரமாக உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை முக்கிய உறுப்பினராக இருந்தாலும் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா முன்வைக்கும் இத்திட்டத்தை பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். செப்டம்பர் 12-13 ஆம் தேதிகளில் நடைபெறும் இக்கூட்டம் மிகவும் முக்கியமானது. பிரிக்ஸ் அமைப்பு உருவாகி 20 வருடம் ஆன நிலையில் இதற்காக சிறப்பு கொண்டாட்டமும் நடக்க உள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் இருக்கும் முக்கியமான இலக்கு என்னவென்றால், இந்த அமைப்பில் இருக்கும் நாடுகள் மத்தியில் நடக்கும் வர்த்தகத்திற்கும், நிதி பரிமாற்றத்திற்கும் டாலரை பயன்படுத்தாமல் அந்தந்த நாட்டின் சொந்த நாணயத்தை பயன்படுத்துவது தான்.
இதன் மூலம் பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் 11 நாடுகளின் வாயிலாக டாலர் அதிக்கத்தை குறைக்கும் முயற்சியாகவும் உள்ளது. இதை தான் டிரம்ப் மறைமுகமாகவும், நேரடியாகும் எதிர்த்தும், Dedollarisation முயற்சிகளுக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
டிஜிட்டல் கரன்சிக்கான ஆய்வுகளையும், சோதனைகளையும் இந்தியா மற்றும் சீனா ஏற்கனவே செய்யப்பட்டு இருக்கும் வேளையில் இரு நாடுகள் தரப்பிலான வர்த்தகத்தை எளிதாக துவங்கிட முடியும் என்பது அடுத்த முக்கிய விஷயமாக உள்ளது.
இதேவேளையில் டாலரின் ஆதிக்கம் தொடர வேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசு அந்நாட்டின் அரசு கருவூல பத்திரத்தை டோக்கனாக மாறும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

