தென்னாப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டி 20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
4 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்ரிக்காவும் வென்றன. அண்மையில் நடந்த 3 ஆவது டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 4 ஆவது டி 20 போட்டி ஜொகனஸ்பர்க் அருகே இன்று இரவு 8.30 மணிக்கு போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, தற்போது பேட்டிங் செய்துவருகிறது.
இதில் முதலில் களம் இறங்கிய சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஜோடி அதிரடி துவக்கத்தை கொடுத்தது. இதில், அபிஷேக் ஷர்மா 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை விளாசி மொத்தம் 36 ரன்களை குவித்திருந்த நிலையில், தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைத் தொடர்ந்து திலக் வர்மா களம் இறங்கி அதிரடி காட்டிவருகிறார். தற்போது (9.20) நிலவரப்படி சஞ்சு சாம்சன் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 65 ரன்களை விளாசியும், திலக் வர்மா, 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை விளாசி மொத்தம் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தற்போது 10.2 ஓவருக்கு, ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை குவித்து விளையாடிவருகிறது.
இதையும் படியுங்கள் :
யார் 11 மணி நேரம் நின்று விளையாடுவார்? – கவுதம் கம்பீரின் அட்டகாசமான பதில்!
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இறுதி போட்டியிலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
அதேசமயம், இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் தென்னாப்ரிக்காவும் விளையாடிவருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
