பிரேத பரிசோதனை முடிவில் ஜான் ஸ்டீபன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து காவல் துறையினர் ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் இரணியலை அடுத்த கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி நெல்லை மாவட்டம், கருவேலங்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

