• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூர் கரிம மண் தீ விபத்து: ஹெலிகாப்டர் மூலம் 33,000 லிட்டர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜோகூர் கரிம மண் தீ விபத்து: ஹெலிகாப்டர் மூலம் 33,000 லிட்டர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், ஜனவரி 28:

பெங்கெராங், தாமான் பாயு டாமாய் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பற்றி எரியும் கரிம மண் தீயை அணைக்க, தீயணைப்புத் துறையின் Mi-17-IV ரக ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. தரைவழி வீரர்கள் செல்ல முடியாத அடர்ந்த பகுதிகளுக்கு வான்வழியாகத் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.

இன்று மதியம் 12.30 மணி முதல் ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டப் பணியில், 21 முறை (Sorties) சுற்றி வந்து மொத்தம் 33,000 லிட்டர் தண்ணீர் தீப்பிடித்த பகுதிகளில் ஊற்றப்பட்டது.

இன்று மாலை மேலும் 50,000 லிட்டர் தண்ணீரை ஊற்றத் தீயணைப்புத் துறை திட்டமிட்டிருந்தது. மேலும் ஒருமுறைக்கு 1,590 லிட்டர் தண்ணீரைச் சுமந்து செல்லும் ‘பாம்பி பக்கெட்’ (Bambi Bucket) முறை பயன்படுத்தப்படுகிறது.

அடர்ந்த புகைமூட்டம் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தாமான் பாயு டாமாய் பல்நோக்கு மண்டபம் மற்றும் எஸ்.கே. சுங்கை கபால் (SK Sungai Kapal) ஆகிய நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நண்பகல் வரை சுமார் 54.8 சதவீத பகுதிகளில் தீ அணைக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் இருந்து வீசும் பலத்த காற்று மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் தீ எரிவது ஹெலிகாப்டர் இயக்கத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது என்று, ஜோகூர் தீயணைப்புத் துறை துணை இயக்குனர் முஹமட் அல் முஸ்தகிம் கூறினார்.

“தற்போது புகைமூட்டம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தப் புகையானது சிங்கப்பூரின் வான் எல்லைக்கு இன்னும் செல்லவில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.



Read More

Previous Post

PM Kisan | விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. பிஎம் கிசான் திட்டத்தில் இனி ரூ.8000.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்பிரைஸ்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

தங்க அடகு மோசடி: அரச வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியலில்

Next Post
தங்க அடகு மோசடி: அரச வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியலில்

தங்க அடகு மோசடி: அரச வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியலில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin