ஜேர்மனி – முனிச்சில் நகரத்தில் ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவராத நிலையில், 15 மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, காவல்துறையினர் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறுயுள்ளதுடன், அவர்களில் பலர் கவலைக்கிடமாகவும், மோசமான நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைள் இடம்பெற்று வருவதாகவும், காரின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது பயங்கரவாத தாக்குதலா விபத்தா என்பது குறித்து தெரியவராத நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், போக்குவரத்து தொழிற்சங்கமான வெர்டியுடன் இணைக்கப்பட்ட பேரணிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மியூனிக் பாதுகாப்பு மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதோடு அமெரிக்க பிரதி தலைவர் ஜே.டி. வான்ஸும் உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இன்று வரவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.