Last Updated:
நௌஃபல், வயநாடு நிலச்சரிவில் மனைவி, 3 குழந்தைகளை இழந்தார். ஓமனில் இருந்து திரும்பி, ‘ஜூலை 30’ என்ற உணவகத்தை திறந்து, வாழ்க்கையை மீண்டும் தொடங்கியுள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது மனைவி, 3 குழந்தைகள் உட்பட 11 குடும்ப உறுப்பினர்களை இழந்த நௌஃபல், தற்போது தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, ‘ஜூலை 30’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கேரளா வயநாடு பகுதியில் உள்ள முண்டகை எனும் சிறு கிராமத்தில் நௌஃபல் வாடகை வீட்டில் வசித்துவந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தனர். செஃப் வேலை செய்துவரும் நௌஃபல் கடந்த ஆண்டு ஓமன் நாட்டில் வசித்துவந்தார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று, கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்த கனமழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச் சரிவில் வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரன்மலை ஆகிய பகுதிகள் மண்ணில் புதைந்தன. இந்தப் பெரும் நிலச்சரிவில் 298 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் நௌஃபலின் மனைவி, மூன்று குழந்தைகளும், அவரது குடும்பத்தினர் 11 பேரும் பலியாகினர்.
சம்பவத்தை அடுத்து ஓமனில் இருந்து நாடு திரும்பிய நௌஃபலுக்கு அந்த இழப்பு பேரிடியாக இருந்தாலும், தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடிவு செய்தார். மேலும், கேரளாவில் ஒரு உணவகத்தை திறந்து அதனை நடத்த வேண்டும் எனும் மறைந்த தனது மனைவியின் ஆசையின் காரணமாக தற்போது ‘ஜூலை 30’ எனும் ஒரு உணவகத்தை திறந்துள்ளார்.
July 26, 2025 8:01 PM IST


